குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-02 11:35 GMT

அரியலூர்-அம்மாகுளம் சாலையானது குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கானோர் சென்று வரும் நிலையில், இந்த சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் மழைநீர் இந்த குழிகளில் தேங்குவதால் சாலைகளில் பள்ளம் இருப்பது தெரிவதில்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்