சீரமைக்க வேண்டும்

Update: 2024-06-02 07:13 GMT

நுள்ளிவிளை ஊர் ஆர்.சி. கல்லறை தோட்டம் அருகில் இருந்து வடக்கு நுள்ளிவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு குடிநீர் இணைப்பிற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இணைப்பு கொடுத்த பிறகு சாலையில் தோண்டிய பள்ளத்தை காங்கிரீட் போட்டு முறையாக சீரமைக்கவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால், அந்த பகுதி முதியோர்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்