திருவள்ளூர் மாவட்டம், அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட, திருவள்ளுவர் தெரு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள்,சாலையில் பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே அந்த சாலைகளில் செல்லும் போது வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.