குண்டும், குழியுமாக மாறிய சாலை

Update: 2024-05-19 12:01 GMT

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்தில் இருந்து புன்னம் சத்திரம்- காகித ஆலை செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் அந்த சாலை புதிதாக போடப்பட்டது. தற்போது புதிதாக போடப்பட்ட சாலையில் ஆங்காங்கே பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்