தார்சாலையை சீரமைக்கலாமே?

Update: 2024-05-12 16:14 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட மேக்கலான் திட்டு, பூனை குண்டு காட்டு கொள்ளை, உள்ளிட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் தார்ச்சாலை பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளிக்கு ஆம்புலன்ஸ் ஊருக்குள் வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, அதிகாரிகள் இந்த பழுதடைந்த சாலையை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும்.

-கதிர், தர்மபுரி.

மேலும் செய்திகள்