மேடு பள்ளமாக காட்சியளிக்கும் சாலை

Update: 2024-05-12 11:49 GMT

அரியலூர்-திருச்சி சாலையானது தினமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. மேலும் இருசக்கர, கனரக வாகன ஓட்டிகள் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலையானது வாரணவாசியில் இருந்து கீழப்பழுவூர் வரை மேடு பள்ளங்களாக காட்சியளிக்கிறது. சாலையின் இடதுபுற ஓரத்தில் கனரக வாகனங்கள் தினமும் சென்று வருவதால் அந்த இடத்தில் மட்டும் குழிபோன்று காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்