சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-05-12 07:46 GMT

புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட உசரவிளை ஊரில் இருந்து மணக்குடி வரை கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் அரசு பஸ்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலையானது மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

-பெருமாள், உசரவிளை.

மேலும் செய்திகள்