நடவடிக்கை தேவை

Update: 2024-05-12 07:20 GMT

கீழ்குளம் சந்திப்பில் இருந்து புத்தன்துறைக்கு செல்லும் குறுகிய சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் கீழ்குளம் பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியின் அருகில் சாலையோரத்தில் பெரிய பாறாங்கல் ஒன்று கிடக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காணப்படும் பாறாங்கல்லை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல் ரசாக, இனயம்.

மேலும் செய்திகள்