போக்குவரத்து இடையூறு

Update: 2024-05-05 17:23 GMT

எரியோடு, கோவிலூர், குஜிலியம்பாறை, பாளையம் ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் சாலையோரத்தை ஆக்கிரமித்து கடை அமைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்