வேகத்தடை வேண்டும்

Update: 2024-05-05 15:03 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கேசவன் பாளையம் பகுதியில் இருந்து அன்னை தெரசா கல்லூரி பஸ் நிலையம் செல்லும் சாலையில் வேகத்தடைகள் இல்லை. இதனால் அந்த சாலை வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள சாலையை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்