ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2024-04-28 16:26 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் இளையனார்குப்பம்-வடமாமந்தூர் சாலையில் அரும்பராம்பட்டு பிரிவு சாலை அருகில் உள்ள அய்யனார் கோவில் வளைவில் சாலையை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி சாலை மிகவும் சுருங்கிப்போய் விட்டது. இதன் காரணமாக இவ்வழியே செல்லும் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே சாலை ஆக்கிரமிப்பை உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்