சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2024-04-28 13:20 GMT

சென்னை ராயப்பேட்டை, ஜி.பி. ரோட்டில் கார்கள் பழுது பார்க்கும் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு பழுது பார்க்க வரும் கார்களை சாலையில் நிறுத்தி வேலை பார்க்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையின் இருபுறமும் இப்படி கார்கள் நிறுத்துவதால் ஆம்புலன்சு மற்றும் பள்ளி வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், மாநகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமால் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடிக்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்