கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

Update: 2024-04-28 11:38 GMT
தூத்துக்குடி பேரூரணியில் இருந்து தட்டப்பாறை செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அங்கு புதிய சாலை அமைப்பதற்காக, பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி, ஜல்லி கற்களை நிரப்பி சமப்படுத்தினர். பின்னர் நீண்ட நாட்களாக சாைல அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே புதிய சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்