வேகத்தடை வேண்டும்

Update: 2024-04-21 18:03 GMT

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பிரிவு சாலையானது பிரட்ஸ் ரோடு வழியாக ரெயில்வே கேட்டுக்கு சென்றடைகிறது. இந்த பிரிவு சாலையில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. போக்குவரத்துக்கு நெரிசலான இந்த சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ-மாணவிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்