சாலையில் திரியும் மாடுகள்

Update: 2024-04-14 17:21 GMT

புதுச்சேரி வேல்ராம்பேட் ஏரிக்கரை செல்லும் வழியில் மாடுகள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரத்தில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் அங்கேயே படுத்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்