சாலை ஆக்கிரமிப்பு

Update: 2024-04-14 11:57 GMT

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம், சிட்கோ நகர் 4-வது பிரதான சாலை மற்றும் நடைபாதை பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. சாலைகளின் இருபுறமும் பல கடைகளை வைத்து ஆக்கிரமிக்க பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பள்ளி மற்றும் அலுவலகங்கள் செல்பவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத அவலநிலை உள்ளது. எனவே, இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறைஅதிகாரிகள் சாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள வண்டி கடைகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்