சாலை போடப்படுமா?

Update: 2024-04-14 11:50 GMT

சென்னை அடையாறு பகுதியில் வண்ணாந்துறை, சாஸ்திரிநகர், பெசன்ட் நகர், வெங்கட்ரத்தினம் நகர், எல்லையம்மன் கோவில் தெரு, ஆகிய இடங்களில் சாலை போடுவதற்காக சாலையில் தோண்டும் பணி நடைபெற்றது. கடந்த ஒரு மாதம் ஆகியும் இதுவரை சாலை போடப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. இதனால், சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை விரைந்து போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்