குண்டும்,குழியுமான சாலை

Update: 2024-04-14 09:50 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் எடுத்துக்கட்டிசாத்தனூர் ஊராட்சியில் வாழைக்கொல்லை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட கிராமத்தில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்