சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-04-07 13:47 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஓரத்தியில் பஸ் நிலையம் உள்ளது. சுற்றியுள்ள பல கிராம மக்கள் பெருநகரங்களுக்கு செல்ல ஓரத்தி பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஓரத்தி பஸ் நிலையத்தில் உள்ள சாலைகள் சிதலமடைந்து மிகுவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றது. மேலும், இங்கு முறையாக கழிப்பிட வசதியும் இல்லை. இதனால், பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீர்படுத்தி முறையான கழிப்பிட வசதியும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்