வத்திராயிருப்பு தாலுகா அயன்கரிசல்குளம் கண்மாய்கரை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தார்ச்சாலை வசதி இல்லாததால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே அப்பகுதி மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி சாலையினை ஆய்வு செய்து புதிய தார்ச்சாலை அமைப்பார்களா?