மதுரை பெரியார் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள சாலைகளான டி.பி.கே. ரோடு முதல் தெற்கு வாசல் பாலம் மற்றும் அவனியாபுரம் வரை செல்லும் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.. இதனால் அந்த சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சேதமடைந்த சாலையால் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.