சென்னை ஆதம்பாக்கம், பாலாஜி நகர் பிரதான சாலையை வண்டி கடைகள் ஆக்கிரமித்து உள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வண்டிகளில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கப்படுகின்றன. இதனால் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் செல்பவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. எனவே, இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள வண்டி கடைகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.