சாலையில் பறக்கும் புழுதியால் அவதி

Update: 2024-03-31 17:17 GMT
திண்டிவனம்-மரக்காணம் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் போக்குவரத்து வசதிக்காக அங்கு தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது அதிக அளவில் புழுதி பறப்பதால் எதிரே வரும் வாகனங்கள் டிரைவர்களின் கண்ணுக்கு சரியாக தெரிவதில்லை. இதனால் அங்கு விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் சாலையில் புழுதி பறப்பதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்