கிடப்பில் சாலை பணிகள்

Update: 2024-03-24 17:57 GMT
வானமாதேவி அருகே பெத்தாங்குப்பம்- கட்டாரசாவடி வயல்வெளி வழியாக செல்லும் மண் பாதையை தார்சாலையாக மாற்ற பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் அறுவடை செய்த விளை பொருள்களை விற்பனைக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்