சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-03-24 10:14 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி மேலசெட்டித்தெருவில் உள்ள அரசு பள்ளி அருகே சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக இருப்பதால் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சாலையில் ஆபத்தான வளைவுகள் அதிகளவில் காணப்படுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதற்காக சாலையோரத்தில் எதிரே வரும் வாகனங்களை பார்ப்பதற்காக பாதுகாப்பு கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் விபத்துகள் அரங்கேறி வருகிறது. எனவே, விபத்தை தடுக்க தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்கவும், சாலையை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்