தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு சென்று வரும் இருவழி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பயணிகள் சென்று வருகிறார்கள். இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. ரெயில் நிலைய நுழைவுவாயிலின் அருகே சாலையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தகடுகள் சேதம் அடைந்து இடைவெளியுடன் காணப்படுகிறது. இந்த சாலையில் நடந்து செல்பவர்கள் இந்த பகுதியில் கால்களை வைத்தால் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த இரும்பு தகடுகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.