செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், ஓரத்தியிலிருந்து கீழ் செம்பேடு கிராமத்துக்கு செல்லும் சாலை நீண்ட காலமாக சேதடமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. மேலும், இந்த சாலையில் வாகனத்தில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.