தார் சாலை வேண்டும்

Update: 2024-03-17 12:44 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உழவர் சந்தைக்கு அருகில் உள்ள மண் சாலையானது முல்லை நகருக்கு செல்கிறது. இந்த சாலை ஒத்தையடி பாதையாக இருந்தது. அதை அகலப்படுத்தி மண் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் கழிவு நீர் செல்லக்கூடிய கால்வாயும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழைபெய்யும்போது இந்த மண் சாலையானது சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்