விபத்து அபாயம்

Update: 2024-03-17 08:22 GMT

நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கவிமணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நுழைவு வாயிலின் வலதுபுறம் மழைநீர் ஓடையில் சிமெண்டு சிலாப் உடைந்து பள்ளமாக காணப்படுகிறது. இதனால், அந்த நடைபாதையில் நடந்து வரும் மாணவிகள், பொதுமக்கள் நிலைதடுமாறி மழைநீர் ஓடைக்குள் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சிமெண்டு சிலாப்பை அகற்றி விட்டு புதிய சிலாப் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்