சாலையை அகலப்படுத்த வேண்டும்

Update: 2024-03-10 11:58 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் அப்பராசபுரம்புத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து ஆக்கூர் செல்லும் சாலை ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கி மிகவும் குறுகலாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்

சாலை வசதி