கூடுதல் வேகத்தடை தேவை

Update: 2024-03-03 17:03 GMT
திருக்கோவிலூர் அருகே அரும்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் 5 முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு புதிதாக சாலை அமைத்த போது 3 இடங்களில் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட்டது. இதனால் இந்த சாலையை பொதுமக்கள் கடக்கும்போது அந்த வழியாக வரும் வாகனத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க ஏற்கனவே இருந்தது போல் 5 இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்