இருள் சூழ்ந்த சாலை

Update: 2024-02-25 17:19 GMT

 திண்டுக்கல் அனுமந்த நகரில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் உள்ள மயானத்தில் இருந்து தெருவிளக்குகள் அடிக்கடி எரிவதில்லை. சமூக விரோதிகள் சிலர் தெருவிளக்குகளை இயக்குவதற்கான சுவிட்சை அணைத்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் திருடர்களின் நடமாட்டமும் உள்ளது. எனவே தெருவிளக்குகள் சீராக எரிவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.


மேலும் செய்திகள்