லாரிகளால் விபத்து அபாயம்

Update: 2024-02-25 15:16 GMT

கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி வழியாக கிருஷ்ணகிரி நகருக்குள் வரும் வாகனங்கள் அப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக செல்கின்றன. இந்த சாலையில் தினமும் ஏராளமான லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தப்படுவதால் எதிரில் வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சுங்கச்சாவடி அருகே சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்