குண்டும் குழியுமாய் சாலை

Update: 2024-02-25 12:50 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் சிட்கோ தொழில்பேட்டை உள்ளது. இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். ஆனால், அந்த பகுதிகளில் செல்லும் சாலைகள் மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும், இந்த பகுதிகளில் உள்ள தெருக்களில் தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. எனவே, இரவு நேரங்களில் இந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை மற்றும் தெருவிளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்