அங்கன்வாடி மையம் அமைக்கப்படுமா?

Update: 2024-02-25 12:49 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜே.எஸ். ராமாபுரத்தில் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் கல்வி கற்று வந்தனர். இந்த கட்டிடம் கடந்த ஓராண்டுகளுக்கு முன் சேதமடைந்ததால், அங்குள்ள குழந்தைகள் தற்காலிகமாக தனியார் கட்டிடத்தில் கல்வி கற்று வந்தனர். அங்கும் போதுமான இட வசதி இல்லாததால் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்