சீரான பஸ்வசதி தேவை

Update: 2024-02-18 12:46 GMT

கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை, பெரியவிளை, கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், சாமிதோப்பு வழியாக வடசேரிக்கு 2 ‘சி’ என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் காலை மற்றும் இரவு நேரங்களில் அகஸ்தீஸ்வரம் வழியாக இயக்கப்படுவதில்லை. இதனால், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, 2 ‘சி’ அரசு பஸ்சை அகஸ்தீஸ்வரம் வழியாக சீராக இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், கொட்டாரம். 

மேலும் செய்திகள்