பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2024-02-11 16:34 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் ஓசூர், கிருஷ்ணகிரி வந்து பணிபுரிகிறார்கள். அவர்கள் இரவு நேரங்களில் சூளகிரி செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் பெரும்பாலான பஸ்கள் சூளகிரியில் நிற்பதில்லை. ஒரு சில பஸ்களும் மேம்பாலத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் சூளகிரி சுற்று வட்டார பயணிகள் சிரமப்படுகிறார்கள். எனவே இரவு நேரங்களில் சூளகிரிக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்