சாலைகளில் ஆக்கிரமிப்புகள்

Update: 2024-02-11 12:19 GMT

கூடலூர் நகரப்பகுதி வழியாக கேரளா, கர்நாடகாவுக்கு செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை மவுனம் சாதித்து வருகின்றனர். இதனால் அந்த சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்