சென்னை மதுரவாயல், காமராஜ் சாலை, பெரியார் நகரில் கழுவுநீர் செல்லும் பாதை உள்ளது. இந்த பாதை சரியாக மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குழந்தைகள் விளையாடும் பகுதி என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் அசம்பாவித சம்பவம் நடப்பதற்குள் உடனடியாக கழுவுநீர் செல்லும் பாதையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.