கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2024-02-04 13:28 GMT

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையம் சுந்தரம்பாள் நகர் 5-வது தெருவில் உள்ள சாலைகள் குண்டு, குழி யுமாக உள்ளது என பொதுமக்கள் சார்பில் பல முறை கோரிக்கைகள் வைக்கப்பட்டு, தற்போது சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்காக ஜல்லி, மணல்கள் கொட்டப்பட்ட நிலையில் பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்