பாலம் கட்டும் பணியில் தொய்வு

Update: 2024-01-28 16:42 GMT

தேனி கொடுவிலார்பட்டி முதலியார் தெருவில் கழிவுநீர் கால்வாய் பாலம் சேதமடைந்து காணப்பட்டது. இதில் புதிதாக பாலம் அமைப்பதற்காக பழைய பாலம் இடித்து அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை பாலம் அமைக்கும் பணி தொடங்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய் மீது விரைந்து பாலம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்