வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2024-01-28 13:07 GMT

அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் சந்தைப்பேட்டை என்ற பகுதி உள்ளது. இதன் அருகில் சாலையோரத்தில் வாரச்சந்தை கூடும் இடம் அமைந்துள்ளது. வியாழக்கிழமை அன்று கூடும் வாரச்சந்தையில் அனைத்து காய்கறிகளும், மளிகை பொருட்களும் மற்றும் பலதரப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இச்சந்தைக்கு அரவக்குச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பெருந்திரளாக வந்து காய்கறிகள் மற்றும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த சந்தை அருகே உள்ள மெயின் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகளவு இருக்கும். அந்த சமயத்தில் கரூரில் இருந்து பள்ளப்பட்டி வழியாக திண்டுக்கல் செல்லும் பஸ்களும், லாரிகளும், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களும் அதிவேகமாகச் சென்று வருகிறது. இதனால் வாரச்சந்தை கூடும் இப்பகுதியில் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில், இப்பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்