தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-01-28 11:57 GMT

கரூர் மாவட்டம், புஞ்சை கடம்பங்குறிச்சி, பெரியவரப்பாளையம் முதல் ஊராட்சி மன்றம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சாலைகள் குண்டு, குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்