சாலைகள் சீரமைக்கப்படுமா?

Update: 2024-01-28 10:12 GMT

கோத்தகிரி நகர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் அனைத்தும் தற்போது சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருவதுடன் விபத்துகளும் ஏற்படுகின்றன. அதுவும் மழை பெய்துவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடுகிறது. எனவே சாலைகளை புதுப்பிக்காவிட்டாலும், சீரமைப்பு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்