விபத்து அபாயம்

Update: 2024-01-28 09:59 GMT

சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் சாலையானது அமர் ஜோதி நகரில் மிகவும் குறுகலாக இருக்கிறது. இங்கு சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டது. மேலும் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அது பள்ளிகள் உள்ள பகுதியாக இருப்பதோடு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் பகுதியாக விளங்குகிறது. ஆனால் சாலை குறுகலாக இருப்பதால், அந்த வழியாக செல்லும் அனைத்து தரப்பினரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்