விபத்து அபாயம்
கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டாரம் பகுதியில் சாலையோரத்தில் விளம்பர பதாகைகள் மேலே செல்லும் மின்கம்பிகள் மீது உரசும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அபாய நிலையில் காணப்படும் விளம்பர பதாகைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலா சுதாகர்,கொட்டாரம்.