சாலை வசதி வேண்டும்

Update: 2024-01-21 12:53 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் வசந்த் நகர் குறுக்கு தெருவில் சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தெருக்களில் சென்று வர மிகவும் அவதிப்படுகின்றனர். சாலை இல்லாததால் மழை காலங்களில் இந்த பகுதி சேரும், சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் புதிய சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்