குண்டும், குழியுமான சாலை

Update: 2024-01-14 17:21 GMT

திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பிடங்கள் முறையாக பராமரிப்பு இன்றி உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்