குண்டும் குழியுமான சாலை

Update: 2024-01-14 12:27 GMT

அரியலூரில் உள்ள வ.உ.சி. நகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் பள்ளி, கோவில் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள சாலையானது மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் இங்குள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இதனால் பலர் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்