சீரமைக்கப்படாத தார்சாலை

Update: 2024-01-07 14:15 GMT

கரூரிலிருந்து வெள்ளியணை வழியாக திண்டுக்கல் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் வெங்கக்கல்பட்டியை அடுத்து சின்னமநாயக்கன்பட்டி பிரிவு உள்ளது. இந்த பிரிவு பகுதியில் இருந்து கத்தாளபட்டிக்கு தார் சாலை செல்கிறது. இந்த தார் சாலையை பயன்படுத்தி சின்னத்தம்பிபாளையம், செல்லிபாளையம், கத்தாளபட்டி, கொங்குநகர், கற்பகா நகர், ஜோதி நகர் மற்றும் சுற்றுபகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாகனங்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி வாகனங்களில் செல்வோருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த தார் சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்